எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல், நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்புப்பணிகளில் நேரடியாக களமிறங்கி உதவினார்.
நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பழைய லாரி கார்களில் உள்ள இரும்புகளை சேகரித்து அதனைத் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பழைய லாரிகளின் உதிரி பாகங்கள் திடீரென எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அந்த வழியாக சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் பரமத்தி வேலூருக்கு காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தப் பழைய இரும்பு கடையின் முன்பு இருந்த பழைய வாகனத்தின் உதிரி பாகங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரிடம் தீ எவ்வாறு பற்றியது என்று கேட்டறிந்தார். மேலும் நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படக்கூடாது என்பதால் தீயை உடனடியாக அணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பழைய வாகனங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


