எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2151.59 கோடி, அதற்கான 6 % வட்டி ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டுமென கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காததால் தமிழ்நாட்டில் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர் பி. வில்சன் கோரிக்கை முன்வைத்தார். ஆனால் நீதிபதிகள் பி. கே. மிஸ்ரா, மன்மோகன் அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


