எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. அவரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:- ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார். பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
_____________________________________________________________________________________
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடவுள்ளார். 22 வயதாகும் ஹைதராபாதைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, இதுவரை இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் 749 ரன்கள் மற்றும் 68 ரன்கள் முறையே எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா விளையாடவுள்ளது குறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாவது:
ஐதராபாதைச் சேர்ந்த சர்வதேச வீரரான என். தாக்குர் திலக் வர்மா ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்கு விளையாடுவதற்காக அந்த அணி நிர்வாகத்தால் அணுகப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்காக அவர் சிறப்பாக விளையாட எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 1,204 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50.16 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 121 ஆகவும் உள்ளது. முதல் தர போட்டிகளில் அவர் 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________
தயாராக உள்ளோம்: ஆலே போப்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உற்சாகத்துடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்தின் ஆலி போப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது இளமையான அணி. ஆனால் இந்த இந்திய வீரர்களிடம் நிறைய ஆழமான திறமை இருக்கிறது. அவர்கள் நல்ல இளம் வீரர்களுடன் இங்கே வந்திருக்கிறார்கள். ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு சத்தமாக பேசக்கூடிய ஒளி நிறைந்த விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யும். ஆனால், அவர்களுடைய மற்ற வீரர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார்கள்.
அதற்கு எங்களுடைய வீரர்களும் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு சிறந்த நேரமாகும். கடந்த கோடைக் காலத்தில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடினோம். ஆனால், இந்திய அணி நிறைய தரத்தைக் கொண்டு வரும். எனவே, நாங்கள் அதிகமாக எதையும் பார்க்காமல் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சரியான நேரமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்ததாக ஆஷஸ் தொடர் வருகிறது. அதற்கு முன்பாக இத்தொடரில் விளையாட நாங்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
_____________________________________________________________________________________
பரிசுத் தொகை அறவிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணி, மற்றும் 2ம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை காணலாம். அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.75 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.18.50 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
_____________________________________________________________________________________
மூன்று அணிகள் தகுதி
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
12 Jun 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக உயர்ந்துள்ளது.
-
டில்லியில் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
12 Jun 2025புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. தலைவராக நானே நீடிப்பேன்: ராமதாஸ் உறுதி
12 Jun 2025விழுப்புரம், 2026 தேர்தல் வரை நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் சோகம் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
12 Jun 2025தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது: திருமாவளவன்
12 Jun 2025சிதம்பரம், தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
முடிவுக்கு வந்தது மோதல்: எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்று கொண்ட அதிபர் டிரம்ப்
12 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி வாழ்த்து
12 Jun 2025சென்னை: சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
12 Jun 2025திருச்சி, எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் எல். முருகன் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி: டாடா குழுமம் அறிவிப்பு
12 Jun 2025புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக மாணவர்கள் புதிய சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jun 2025சென்னை, யு.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வு முடிவுகளில் நம் மாணவர்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
12 Jun 2025சென்னை, தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
-
அகமதாபாத்தில் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்
12 Jun 2025குஜராத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
-
டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
12 Jun 2025டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
-
அகமதாபாத்தில் பிரிட்டனுக்கு கிளம்பிய விமான விபத்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சி தகவல்
12 Jun 2025லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
-
பி.எஸ்.எப். வீரர்களுக்கு மோசமான ரயில்: 4 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
12 Jun 2025புதுடில்லி, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மிக மோசமான நிலையில் உள்ள ரயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
-
விபத்தின் போது நடந்தது என்ன? டி.ஜி.சி.ஏ., விளக்கம்
12 Jun 2025புதுடில்லி, ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்து உள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து: அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்
12 Jun 2025புதுடில்லி, அகமதாபாத் விமான விபத்துக்கு மத்திய அமச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்த ஹவாய்த்தீவு எரிமலை
12 Jun 2025ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது.
-
தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? அமைச்சர் பெரியசாமி
12 Jun 2025திண்டுக்கல், தி.மு.க. கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
விமானத்தின் எமர்ஜென்சி வழியாக குதித்து உயிர் பிழைத்த பயணி
12 Jun 2025அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
12 Jun 2025டெல்லி: சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மிக கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை
12 Jun 2025கோவை, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்
-
அமெரிக்க அதிபர் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 400 பேர் கைது
12 Jun 2025லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது
-
அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு
12 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவில் காட்டுத்தீ 700 குடும்பங்கள் வெளியேற்றம்
12 Jun 2025ஓரிகன்: அமெரிக்காவில் காட்டுத் தீக்கு 700 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.