முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷ்ரேயாஸுக்கு கங்குலி ஆதரவு

புதன்கிழமை, 11 ஜூன் 2025      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. அவரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:- ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார். பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

_____________________________________________________________________________________

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடவுள்ளார். 22 வயதாகும் ஹைதராபாதைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, இதுவரை இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் 749 ரன்கள் மற்றும் 68 ரன்கள் முறையே எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா விளையாடவுள்ளது குறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாவது: 

ஐதராபாதைச் சேர்ந்த சர்வதேச வீரரான என். தாக்குர் திலக் வர்மா ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்கு விளையாடுவதற்காக அந்த அணி நிர்வாகத்தால் அணுகப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்காக அவர் சிறப்பாக விளையாட எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 1,204 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50.16 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 121 ஆகவும் உள்ளது. முதல் தர போட்டிகளில் அவர் 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________________

தயாராக உள்ளோம்: ஆலே போப்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உற்சாகத்துடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்தின் ஆலி போப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது இளமையான அணி. ஆனால் இந்த இந்திய வீரர்களிடம் நிறைய ஆழமான திறமை இருக்கிறது. அவர்கள் நல்ல இளம் வீரர்களுடன் இங்கே வந்திருக்கிறார்கள். ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு சத்தமாக பேசக்கூடிய ஒளி நிறைந்த விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யும். ஆனால், அவர்களுடைய மற்ற வீரர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார்கள்.

அதற்கு எங்களுடைய வீரர்களும் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு சிறந்த நேரமாகும். கடந்த கோடைக் காலத்தில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடினோம். ஆனால், இந்திய அணி நிறைய தரத்தைக் கொண்டு வரும். எனவே, நாங்கள் அதிகமாக எதையும் பார்க்காமல் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சரியான நேரமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்ததாக ஆஷஸ் தொடர் வருகிறது. அதற்கு முன்பாக இத்தொடரில் விளையாட நாங்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

_____________________________________________________________________________________

பரிசுத் தொகை அறவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணி, மற்றும் 2ம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை காணலாம். அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.75 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.18.50 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

_____________________________________________________________________________________

மூன்று அணிகள் தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து