எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும்.
இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும். இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.
டொனால்டை முந்திய ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த அசத்தலான பந்துவீச்சின் மூலம் அந்நாட்டிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை முந்தியுள்ளார். ஆலன் டொனால்டை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
1. டேல் ஸ்டெயின் - 439 விக்கெட்டுகள் (93 போட்டிகள்)
2. ஷான் பொல்லாக் - 421 விக்கெட்டுகள் (108 போட்டிகள்)
3. மகாயா நிதினி - 390 விக்கெட்டுகள் (101 போட்டிகள்)
4. ககிசோ ரபாடா - 332 விக்கெட்டுகள் (71 போட்டிகள்)
5. ஆலன் டொனால்டு - 330 (72 போட்டிகள்)
வீராங்கனை மனு பாக்கர் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றுக்கு 8 பேரில் ஒருவராக நுழைந்த இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் பதக்க மேடையில் ஏற தவறினார்.
அவர் 20 புள்ளிகளுடன் 5-வது இடமே பிடித்தார். சீனாவின் யுஜி சன் 38 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போல் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்தியாவின் செயின் சிங் 407 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சுப்மன் கில்லுக்கு பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் லீட்சில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான கேரி கிர்ஸ்டன் கூறுகையில், 'சுப்மன் கில், கிரிக்கெட் பற்றி ஆழமாக புரிந்து கொண்ட ஒரு புத்திசாலித்தனமான வீரர். சிறந்த கேப்டனாக உருவெடுப்பதற்குரிய அனைத்து பண்புகளும் அவரிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்த அவர் தயாராகி வருகிறார்' என்றார்.
ஏ.பி.டி.யின் செயலால் ஆச்சர்யம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள் கிரிக்கெட்டர்களும் வந்துள்ளார்கள். கேன் வில்லியம்சனும் போட்டியை பார்த்து வருகிறார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இந்தப் போட்டிக்கான வர்ணனையாளராக லண்டன் சென்றுள்ளார். இவருடன் அவரது குழந்தைகளும் போட்டியைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
ஏபிடி தனது குழந்தைகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேனிடம் ஜெர்ஸியில் கையெழுத்து வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விடியோவைப் பகிரும் ரசிகர்கள், “இதுதான் ஏபிடியின் பெருந்தன்மை” எனப் புகழ்ந்து வருகிறார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாரனஸ் லபுஷேன் தற்போது முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
12 Jun 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக உயர்ந்துள்ளது.
-
தென்காசியில் சோகம் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
12 Jun 2025தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி வாழ்த்து
12 Jun 2025சென்னை: சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி: டாடா குழுமம் அறிவிப்பு
12 Jun 2025புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என்.
-
அகமதாபாத்தில் பிரிட்டனுக்கு கிளம்பிய விமான விபத்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சி தகவல்
12 Jun 2025லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
-
விமானத்தின் எமர்ஜென்சி வழியாக குதித்து உயிர் பிழைத்த பயணி
12 Jun 2025அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்த ஹவாய்த்தீவு எரிமலை
12 Jun 2025ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது.
-
சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்த சோலார் ஆர்பிட்டர்
12 Jun 2025ஐரோப்பிய: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது.
-
டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
12 Jun 2025டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
-
அகமதாபாத்தில் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்
12 Jun 2025குஜராத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
-
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
12 Jun 2025டெல்லி: சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவில் காட்டுத்தீ 700 குடும்பங்கள் வெளியேற்றம்
12 Jun 2025ஓரிகன்: அமெரிக்காவில் காட்டுத் தீக்கு 700 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
-
அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு
12 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 400 பேர் கைது
12 Jun 2025லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது
-
மேற்குவங்கத்தில் இருதரப்பினர் மோதல் 40 பேர் கைது
12 Jun 2025கோல்கட்டா: மேற்குவங்கத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
ஆர்.சி.பி. அணியை வாங்க பைத்தியக்காரனா? கர்நாடக துணை முதல்வர் ஆவேசம்
12 Jun 2025பெங்களூரு: ஆர்.சி.பி. அணியை வாங்க நான் பைத்தியக்காரன் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
-
இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி
12 Jun 2025ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.
-
பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை
12 Jun 2025பாரீஸ்: பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
விமான விபத்து: மீட்புப்பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி
12 Jun 2025புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி வருகின்றனர்.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபருக்கு ஜாமீன் மறுப்பு
12 Jun 2025ஹிசார்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்
12 Jun 2025அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழ
-
உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு
12 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
குஜராத் விமான விபத்து: உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
12 Jun 2025அகமதாபாத்: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அதிக அரைசதம்: சச்சின் சாதனையை முறியடித்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்
12 Jun 2025லார்ட்ஸ்: ஐ.சி.சி. நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.
-
விராட் கோலியிடம் கேப்டன்சியை கொடுத்திருப்பேன்: ரவி சாஸ்திரி
12 Jun 2025மும்பை: முடிவு எடுக்கும் அதிகாரத்தில் நான் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு விராட் கோலியிடம் கேப்டன்சியை கொடுத்திருப்பேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள