எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் , விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற விதமாக, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் . மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
___________________________________________________________________________________________________
சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா உள்பட 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து 8 வீராங்கனைகளில் ஒருவராக இறுதி சுற்றுக்குள் நுழைந்த சம்ரா இறுதிப்போட்டியில் 453.1 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்த பந்தயத்தில் உலக சாதனையாளராக விளங்கும் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது சம்ரா இந்த ஆண்டு தொடக்கத்தில் பியூனஸ் அயர்சில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் ஆஷி சோக்சி (589) 11-வது இடமும், அஞ்சும் மோட்ஜில் (586) 27-வது இடமும், ஸ்ரீயங்கா சடான்ஜி (582) 53-வது இடமும், நிஸ்சால் (580) 60-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இளவேனில் வெண்கலம் வென்றிருந்தார்.
___________________________________________________________________________________________________
விம்பிள்டன் பரிசு தொகை..?
லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 622 கோடி. இது, கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 35 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்.
முதல் சுற்றோடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 76 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். இதேபோல இரட்டையர், கலப்பு இரட்டையர், வீல்சேர், ஜாம்பவான்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பந்து 'பிட்ச்' ஆகும் இடத்தை எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க உள்ளனர்.
___________________________________________________________________________________________________
கருண் நாயருக்கு பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் , கருண் நாயரை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்புவது என்பது எளிதானது அல்ல.
உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு ரன் குவித்துள்ளீர்கள் என்பது விஷயமல்ல. ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேராடி மீண்டெழும் மனப்பாங்கு தான் முக்கியம். அது தான் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
___________________________________________________________________________________________________
இந்திய அணியில் ராதா யாதவ்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இடம் பிடித்து இருந்த 20 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சுசி உபாத்யாய் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீராங்கனையை அறிவித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவை மகளிர் தேர்வு கமிட்டி மாற்று வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது.
___________________________________________________________________________________________________
ஐ.சி.சி. பதிவு வைரல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா 138க்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி. அணி 2ஆம் நாள் முடிவில் 144க்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைனை ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் ரன் ஓடும்போது தெரியாமல் மோதினார்.
அடுத்ததாக ஆஸி. கீப்பர் அலெக்ஸ் கேரியை தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜா ரன் ஓடும்போது மோதினார். இந்த விடியோ காட்சிகளை ஐ.சி.சி. தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டபிள்யூ.டபிள்யூ.இ. ஒலியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக இரு அணிகளும் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
___________________________________________________________________________________________________
ஆலன் வரலாற்றுச் சாதனை
அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி. (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்காக விளையாடும் பின் ஆலன் அதிவேகமாக சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 269.08 ஆக இருந்தது.
எம்.எல்.சி. டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் பிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து பின் ஆலன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
___________________________________________________________________________________________________
தயாராகும் அஸ்டெகா மைதானம்
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய எல்.இ.டி. திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், சி.சி.டி.வி. கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.
மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும். இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' தொடக்கம்:முதல்வர் ஸ்டாலின் இன்று ரயிலில் சிதம்பரம் பயணம்
13 Jul 2025சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!
13 Jul 2025டெஹ்ரான்: கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: பிரதமர் மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடில்லி: 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார்.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு
13 Jul 2025திருவள்ளூர்: சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: பீகாரில் ஒரே வாரத்தில் 2-வது பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை
13 Jul 2025பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திர கேவத் (52) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
பாராளுமன்ற கூட்டத்தொடர்: காங்., எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை
13 Jul 2025புதுடில்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
-
உல்பா பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
13 Jul 2025கவுகாத்தி: தங்கள் முகாம் மீது இந்திய ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது,'' என உல்பா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
-
155 செயற்கை கோள்களை அடுத்த 3 ஆண்டுகளில் ஏவ இஸ்ரோ திட்டம்
13 Jul 2025குலசேகரம்: இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.