எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்றுதொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த முதல் போட்டிக்கு தயாராகும் இந்திய அணியினர் லீட்சில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
பேட்டை பரிசளித்த ரோகித்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு ரோகித் சர்மா தான் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக கொடுத்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆயுஷ் மாத்ரே பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சி அணிக்கு ரூ.538 கோடி
ஆர்.எஸ்.டபிள்யூ. நிறுவனம், 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால், 2012 ஆம் ஆண்டில் பி.சி.சி.ஐ. நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.
இதற்கு எதிராக ஆர்.எஸ்.டபிள்யூ. நிறுவனம் நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ரூ.555 கோடி இழப்பீடு கோரப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி வழங்க பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்போகிறதா அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யபோகிறதா என பி.சி.சி.ஐ. தரப்பு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
ரோகித் சர்மா சாதனை சமன்
6 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வாஷிங்டன் பிரீடம் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்சை சந்தித்தது. முதலில் பேட் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. 6-வது வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடிய கேப்டன் மேக்ஸ்வெல் 106 ரன்கள் (49 பந்து, 2 பவுண்டரி, 13 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத்தொடர்ந்து ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 16.3 ஓவர்களில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் வாஷிங்டன் அணி 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) அடித்த 8-வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் 4-வது இடத்தில் உள்ள ரோகித் சர்மா (இந்தியா), மைக்கேல் கிலின்ஜெர், ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் (மூவரும் ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். c
பயிற்சியின் போது கருண் காயம்
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் இன்று ( 20-ந்தேதி ) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக லீட்சில் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியின் போது கருண் நாயருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை எதிர் கொண்ட போது பந்து கருண் நாயரின் இடுப்பை தாக்கியது.
இதனால் கருண் நாயர் வலியால் துடித்தார். பிறகு ஒன்று இல்லை என்பது போல மீண்டும் பேட்டிங் செய்தார். பிறகு பேட்டிங்கை முடித்து விட்டு இடுப்பை தடவி கொண்டே வெளியே வந்தார். டிசர்ட்டை எடுத்து பார்த்த போது இடுப்பில் பந்து தடம் அப்படியே பதிந்திருந்தது. அதனை சக வீரர்களிடம் சிரித்தபடி இதோ பார்த்துக்கோ என்பது போல காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-06-2025.
19 Jun 2025 -
எனது கருத்தியல் உடன்பிறப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்: முதல்வர்
19 Jun 2025சென்னை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை ரூ.520 உயர்வு
19 Jun 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,200 ரூபாய்க்கும்; சவரன், 73,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
19 Jun 2025திருச்சி, திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? சென்னை ஐகோர்ட் கேள்வி
19 Jun 2025சென்னை, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத
-
தமிழ்நாட்டின் மீது உலக நாடுகள் அதிக நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
19 Jun 2025சென்னை, திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து பெருமி
-
பா.ம.க., பிரச்னையில் தி.மு.க. தலையீடா..? அப்பட்டமான பொய் என்கிறார் ராமதாஸ்
19 Jun 2025சென்னை, பா.ம.க., பிரச்னையில் தி.மு.க., தலையிடுவதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளது அப்பட்டமான பொய் என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
சட்டவிரோத பணக்குவியல் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய விசாரணைக்குழு பரிந்துரை
19 Jun 2025புதுடில்லி, வீட்டில் சட்டவிரோதமாக பணக்குவியல்களை மறைத்து வைத்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தி.மு.க.வில் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கும் பணி: வருகிற 25 - ம் தேதி தொடங்கி வைகிறார் முதல்வர் ஸ்டாலின்
19 Jun 2025சென்னை, தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணியை வருகிற 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
ஏ.டி.ஜி.பி. ஜெயராமுக்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
19 Jun 2025புதுடில்லி, ஆள்கடத்தல் விவகாரத்தில் ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்தது.
-
பா.ம.க. எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்: பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேச்சு
19 Jun 2025சேலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய பிரார்த்தனை செய்வோம்' என பா.ம.க., தலைவர் அன்புமணி
-
ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
19 Jun 2025புதுடில்லி, '' நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். இது போன்ற சமூகம் விரைவில் உருவாகும், '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
உலகின் முன்னணி பல்கலை., பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி.க்கு 180-வது இடம்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
19 Jun 2025புதுடில்லி, உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி., 180-வது இடத்தை பிடித்
-
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்க முயற்சி: கீழடி விவகாரத்தில் மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Jun 2025சென்னை, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக் கூடிய மத்திய பா.ஜ.க.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
19 Jun 2025சென்னை, வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
19 Jun 2025புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.