Idhayam Matrimony

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: பீகாரில் ஒரே வாரத்தில் 2-வது பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Gun 2023 04 17

Source: provided

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திர கேவத் (52) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் 2வது பா.ஜ., தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.

பீகாரில், கடந்த ஜூலை 6ம் தேதி, தலைநகர் பாட்னாவில் காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 'ட்வின் டவர்' பகுதியில், பிரபல தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான கோபால் கெம்கா, வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார்.

இந்நிலையில், தற்போது பாட்னாவில் பா. ஜ. தலைவர் சுரேந்திர கேவத் (52) சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். பைக்கில் வந்த இருவர், 4 முறை சுட்டதில் படுகாயமடைந்த கேவத், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினரிடமிருந்து புகார் கிடைத்த பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பா.ஜ., தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 6ம் தேதி பா.ஜ., தலைவர் கோபால் கெம்கா என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து