எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிபதிகள், குடியுரிமையை பரிசோதிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தனர். எனினும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், அரசியல் சாசனப்படி கட்டாயம் எனக்கூறிய நீதிபதிகள் இந்த நடவடிக்கையை தொடர அனுமதி அளித்தினர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இவ்வாறு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் நாடு முழுவதும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கின் அடுத்த விசாரணை 28-ந் தேதி நடைபெறும் நிலையில், அதன் மீது பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


