எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் 5 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் தமிழக அரசின் கோரிக்கை மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
* சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2,121.59 கோடியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.
* ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ரூ.10.740 கோடியில் 34.8 கி.மீ தூரத்தில் அமைய உள்ள கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். ரூ.11,368 கோடியில் 32 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.
* 2025-26ம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியை விரைவாக வழங்க வேண்டும்.
* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்படி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு 5 கோரிக்கை மனுக்கள் பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


