Idhayam Matrimony

நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்திற்கு பிரதமர் வருவதில்லை : தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      இந்தியா
Trichy-Siva

Source: provided

டெல்லி : நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்களின் பெயரைத்தான் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வாக்காளர்களை நீக்கி வெற்றி பெற பா.ஜ.க. முயல்வதாக எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோருகின்றன. அதாவது இரண்டு விஷயங்கள் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது. அதேபோல பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு எரிந்துகொண்டிருக்கும் பிரச்னை. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை என்பது மிகவும் அடிப்படையான உரிமை. அதன் மூலமாகவே அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் வாக்குரிமையே இல்லை என்றால் குடிமகனாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

வாக்குரிமையை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இதுபற்றி அரசு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். விவாதித்து நாம் முடிவெடுப்போம். பிரதமர் பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அரிதாகவே பாராளுமன்றத்திற்கு வருவார். பொறுப்புமிக்கவர்கள் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வருகிறார்கள். பாராளுமன்றம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. நாங்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்க விரும்புகிறோம். அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து