எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது., முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று நடத்தினோம். சென்றாண்டு கனமழை நேரத்தின் போது கிடைத்த அனுபவங்கள், அவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் நிலை குறித்து இக்கூட்டத்தில் கேட்டறிந்தோம்.
மழை நீர் வடிகால்களை சரி செய்வது - கால்வாய்களுக்கான நீர்வழிப்பாதைகளை சீரமைப்பது - முகத்துவாரம் மற்றும் கழிமுகப்பகுதிகளில் நீர் வெளியேறும் வண்ணம் அவற்றை ஆழப்படுத்துவது - சாலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து சென்னை மாநகராட்சி - நீர்வளத்துறை - நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து நிறைவு செய்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட்டு பருவமழை நேரத்தில் பாதிப்புகள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டோம். என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


