எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சி.எஸ்.கே. அணியிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அந்த அணி நிர்வாகத்திற்கு அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ. 9.75 கோடிக்கு...
ஐ.பி.எல். 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து சி.எஸ்.கே. அணிக்கு அஸ்வின் திரும்பினார்.
ஏமாற்றம்...
இந்த சூழலில் அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை சி.எஸ்.கே. அணிக்காக ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏமாற்றத்தை அளித்தார். பேட்டிங் பந்து வீச்சு என இரண்டிலுமே அவரால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. பேட்டிங்கில் 9 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 33 ரன்கள் தான் அடித்து இருந்தார். ஒன்பது போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே ஏழு விக்கெட்டுகளை தான் அவர் கைப்பற்றி இருந்தார்.
ரசிகர்கள் அதிர்ச்சி...
இந்த தருணத்தில் அஸ்வின் அடுத்த ஆண்டும் சி.எஸ்.கே. அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு என்னை அணியிலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.
சஞ்சு சாம்சன்...
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்காக வரவுள்ள நிலையில் ராஜஸ்தான் அணி அஸ்வினை மீண்டும் கேட்பதாக தெரிகிறது. இதை அறிந்து கொண்ட அஸ்வின் தான் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு செல்ல இருப்பதாகவும் இதனால் தம்மை விடுவித்து விடுங்கள் என்று அஸ்வின் கூறியதாகவும் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


