எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காஸா : காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார்.
காஸா பகுதியினுள் செயல்பட்டு வரும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையைத் தோற்கடிக்க, இஸ்ரேல் ராணுவம், போர் தாக்குதல்கள் இல்லாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கியபடி, காஸாவை முழுவதுமாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு, நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்தத் திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் கூறியதாவது:-
இஸ்ரேலின் இந்தத் திட்டமானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட இருநாட்டு தீர்வுகளின் படி இஸ்ரேல் உடனடியாக அதன் ஆக்கிரமிப்புகளைக் கைவிடவேண்டும். இது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு எதிரானது” என அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, காஸாவினுள் தடையின்றி நிவாரணப் பொருள்கள் நுழைவதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும், பாலஸ்தீன போராளிக் குழுக்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், இஸ்ரேலும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


