எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும்,‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- “ஸ்டாலினுக்கும் கம்பன் விழாவிற்கும் என்ன தொடர்பு? என்று யாரும் வியக்க வேண்டாம். 1999-ல் இதே அரங்கில், நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் முன்னின்று நடத்திய கம்பன் விழாவில் கலைஞர் கருணாநிதி பங்கேற்றார். அந்த மேடையில் ஜெகத்ரட்சகனும் இருந்தார்.
அதற்கும் முன்னால், 1969-இல் பெரியவர் சா.கணேசன் காரைக்குடியில் நடத்திய கம்பன் விழாவிலும் முத்தமிழறிஞர் கலைஞர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் என்ன சொன்னார் என்றால், “இந்த விழாவிற்கு வந்த என்னை ஆச்சரியத்தோடு பார்க்காதீர்கள், என்னை அழைத்து வந்தவர்களை ஆச்சரியத்தோடு பாருங்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார்.
நானும் அப்படித்தான், கம்பரின் தமிழுக்காகவும் - ஜெகத்ரட்சகனின் அன்புக்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இந்தச் சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவாக, அறிஞர்கள் பலரும் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருதை நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து பெற்றிருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!
கம்பன் கழகம் வழங்கும் ‘இயற்றமிழ் அறிஞர்’ விருதைப் பெற்றிருக்கும் பேராசிரியர் ஞானசுந்தரம் அவர்களையும், கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன் அவர்களையும், முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களையும், சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களையும், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜையும் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற விழாக்கள் இலக்கியச் சுவையை பேசுவது மட்டுமல்லாமல், இன்றைய இளைய தலைமுறைக்கும் இலக்கியச் சுவையை ஊட்டும் வகையில் அமைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட இயக்கம், கம்ப இராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்த இயக்கம். சில கருத்துகளுக்காக விமர்சிக்கப்பட்டாலும், கவிதைக்காக, அதில் இருக்கும் தமிழுக்காக பாராட்டப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான காலத்தில்தான் சென்னை கடற்கரையில் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குச் சிலை வைக்கப்பட்டது. வடபுலத்தைச் சேர்ந்த வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழ் மண்ணின் மணம் மணக்க கம்பர் எழுதியது நமக்கு தெரியும்.
அயோத்தியின் பெருமையை சொல்லும்போது கூட, காவிரி நாட்டுடன் ஒப்பிட்டவர் கம்பர். இராமனை அவதாரமாக காட்டுவது வால்மீகியின் பார்வை. ஆனால், சக்ரவர்த்தியின் மகனாக தொடங்கி, கோசலை நாட்டு சக்ரவர்த்தியாக முடிப்பது கம்பரின் பார்வை. கதையில் வரும் அரசர்கள் பெயரை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் கம்பர். ‘கம்பன் கண்ட சமரசம்’ என்ற புத்தகத்தை எழுதிய நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் கம்பன் கழக விழாக்களைத் தொடர்ந்து நடத்தி, கம்பனின் தமிழில் சமூக ஒற்றுமையைக் கண்டார்.
“நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான், அதுபோல், வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்” என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 1989-ம் ஆண்டு இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றிய தலைவர் கலைஞர், “கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டார்.
“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்” என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விருதுகள் பெற்ற எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் சொல்லி, கம்பன் கழக விழாக்களை மிகச்சிறப்பாக நடத்தி வரும் திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகனையும் மனதார பாராட்டி விடைபெறுகிறேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடர்க! நான் என் மக்கள் பணியை தொடர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-08-2025.
09 Aug 2025 -
டெல்லியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி
09 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
-
அன்புமணி பொதுக்குழு சொல்வதற்கு ஒன்றுமில்லை: ராமதாஸ் பதில்
09 Aug 2025விழுப்புரம், அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு சொல்வதற்கு ஏதுமில்லை என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம்
09 Aug 2025சென்னை, இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
-
ஆசிய கோப்பை தொடர் : இந்தியா-பாக்., போட்டி ரத்து? - யு.ஏ.இ. கிரிக்கெட் வாரியம் பதில்
09 Aug 2025துபாய் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைமை இயக்க அதிகாரி கூறியுள்ளார்.
-
திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: எடப்பாடி பழனிசாமி காட்டம்
09 Aug 2025ஓமலூர், ''தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்.ஜி.ஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்,'' என்று அ.தி.மு.க.
-
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நான்தான்: அதிபர் டிரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு
09 Aug 2025நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
-
சாத்தூர்: பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி; ஒருவர் படுகாயம்
09 Aug 2025சாத்தூர், சாத்தூரில் பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாம் அடைந்தார்.
-
தலைவராக அன்புமணியே தொடர்வார்: பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம்
09 Aug 2025செங்கல்பட்டு, 2026 ஆகஸ்டு வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
-
672.52 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள்: அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20,021 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
09 Aug 2025பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20 ஆயிரத்து 21 பேருக்கு ரூ.672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக
-
பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
09 Aug 2025சென்னை, விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
சுமார் ரூ.1,650 கோடி செலவில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் : முதல்வா் சித்தராமையா ஆலோசனை
09 Aug 2025பெங்களூரு, : கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.
-
தற்போதைய சூழலுக்கு ஏற்ப கல்விக் கொள்கை வடிவமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
09 Aug 2025சென்னை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Aug 2025சென்னை, தங்கம் விலை சற்று குறைந்து நேற்று விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.
-
குஜராத்: விபத்தில் 4 பேர் பலி
09 Aug 2025காந்திநகர், குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் தீயில் கருகி பலி
-
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: களமிறங்குகிறார் விராட்கோலி?
09 Aug 2025மும்பை : இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் : அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
09 Aug 2025அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி உரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றின
-
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜா நியமனம்
09 Aug 2025சென்னை, தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
09 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
09 Aug 2025சென்னை, இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த
-
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் பலி
09 Aug 2025சிம்லா, இமாசலபிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
334 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
09 Aug 2025புதுடெல்லி, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
09 Aug 2025தாம்பரம், தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
முதன்முதலில் நிலவை சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் காலமானார்
09 Aug 2025நியூயார்க், நிலவை முதன் முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்.
-
அஜித்குமார் வழக்கில் திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா?
09 Aug 2025சிவகங்கை, அஜித்குமார் வழக்கில் பொய் புகார் கொடுத்தாரா நிகிதா என சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.