Idhayam Matrimony

உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      இந்தியா
Pm-modi-2-2025-08-15

புதுடெல்லி, 79-வது சுதந்திர தின விழாவினை ஒட்டி பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது.

கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “இன்று, 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பு பிறந்தது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம். தேச கட்டுமானத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன் அத்தியாயம். 'வியாக்தி நிர்மான் சே ராஷ்ட்ர நிர்மான்' என்ற உறுதியுடன், மா பாரதியின் நலனை நோக்கமாகக் கொண்டு, ஸ்வயம்சேவகர்களே நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், ஆர்.எஸ்.எஸ். உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதற்கிடையே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்கல் பிபண்ணா சஹாயத சமிதியில் மூவர்ணக் கொடியை ஏற்றி 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பகவத், “இந்தியா ஒரு தனித்துவமான நாடு. உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரவும், அதன் தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பாடுபடுகிறது. நாம் சுதந்திரம் பெற்றதற்குக் காரணம், நம் நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி, தைரியம், பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதையைப் பெறுவதை உறுதி செய்வதாகும்.

இன்று, உலகம் தடுமாறி வருகிறது. 2000 ஆண்டுகளில் பல சோதனைகள் இருந்தபோதிலும், அதன் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலகிற்கு ஒரு தீர்வை வழங்குவதும், மதக் கொள்கைகளில் வேரூன்றிய நமது தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்த ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதும் நமது கடமையாகும்," என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து