எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சந்த் ஸ்ரீ மவுலி த்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர். என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.
விஷ்வ வாரகரி சந்த்ஸ்ரீ ஞானேஸ்வர் மகராஜ் மற்றும் வாரகரி சந்துக்களின் ஆன்மிக பாரம்பரியத்தை உலக அளவில் பரப்பும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சந்த் ஸ்ரீ மவுலித்யானேஷ்வர் மஹராஜின் 750-வது ஜெயந்தி விழா, சென்னை அடையார் அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் காஞ்சி மகாஸ்வாமி அனந்த மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவிபேசியதாவது: பாரதம் உலகை இயக்கும் உயிர்சக்தி என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். தர்மத்தில் நம்முடைய ஈடுபாடு சேரும்போது இந்த ஆற்றல் அதிகரிக்கிறது. பாரதம் சனாதன தர்மத்தின் காலமற்ற மகத்துவத்தை போற்றி வருகிறது. அறிவால் பிறந்த ஒரே புண்ணிய பூமி நம் பாரதம்தான். இந்தியா முழுவதும் குருநானக், நர்சிங் மேத்தா, ரவி தாஸ், துளசி தாஸ், சங்கர் தேவ், ஜெயதேவர், சைதன்ய பிரபு, ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் பக் தர்கள் மனதில் ஞானத்தையும் பக்தியையும் பதிய வைத்தனர். கலாச்சாரம் மக்கள் மனங்களில் வாழ்கிறது. அது அமைப்புகள், கட்டிடங்களில் மட்டும் இல்லை.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறப்பு, பலமொழிகள், பல பழக்கவழக்கங்கள் என்று இருந்தாலும் மக்கள் மனதில் ஒற்றுமை உணர்வு இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பதை மகா உபநிஷதம் வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்று குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


