எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து, விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ரஷ்யா செல்ல உள்ளார். 3 நாள் பயணமாக ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள சூழ்நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது உக்ரைனில் அமைதியைக் கொண்டுவர டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் குறித்து ஜெய்சங்கரும், செர்ஜி லாவ்ரோவும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


