எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மக்காய் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், கேமரான் கிரீன் என மூவர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 276 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது போட்டி மக்காய் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பேட்டிங்' தேர்வு செய்தார். வலுவான துவக்கம்: ஆஸ்திரேலிய அணிக்கு ஹெட், மார்ஷ் அதிரடி துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். ரபாடா (கணுக்கால் காயம்), லுங்கிடி (ரெஸ்ட்) இல்லாத நிலையில், தென் ஆப்ரிக்க பந்துவீச்சு எடுபடவில்லை. ஒருநாள் அரங்கில் ஹெட், தனது 7வது சதத்தை எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 250 ரன் சேர்த்த நிலையில், மஹாராஜ் 'சுழலில்' ஹெட் சிக்கினார். மறுபக்கம் சதம் அடித்த கையோடு மார்ஷ் அவுட்டானார்.
முன்னதாக களமிறக்கப்பட்ட கேமரான் கிரீன் வெளுத்து வாங்கினார். தமிழக வம்சாவளி 'ஸ்பின்னர்' செனுரான் முத்துசாமி ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார். கிரீன், 47 பந்தில் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதம் அடித்தார். கடைசி 10 ஓவரில் 126 ரன் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 431/2 ரன் குவித்தது. கிரீன், கேரி (50) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோப்பை வசமானது: கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (2), ரிக்கிள்டன் (11), கேப்டன் பவுமா (19) ஏமாற்றினர். ஜோர்ஜி (33), பிரவிஸ் (49), கார்பின் (17) உள்ளிட்டோர் கூப்பர் கொனாலி 'சுழலில்' நடையை கட்டினர். தென் ஆப்ரிக்க அணி 24.5 ஓவரில் 155 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இருப்பினும் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் (142 ரன்) வென்றார்.
ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது சிறந்த வெற்றியை (276 ரன்) பதிவு செய்தது. முதலிடத்தில் 309 ரன்னில் வென்றது (எதிர், நெதர்லாந்து, 2023, டில்லி) நீடிக்கிறது. தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் போட்டிகளில் தனது மோசமான தோல்வியை (276 ரன்) பெற்றது. இதற்கு முன் 243 ரன்னில் (எதிர், இந்தியா, 2023, கோல்கட்டா) தோற்று இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 5வது ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. 431/2 ரன் ஒருநாள் அரங்கில் ஆஸ்திரேலிய அணி நேற்று முன்திம் தனது 2-வது அதிகபட்ச ஸ்கோரை (431/2) பதிவு செய்தது. முதலிடத்தில் 434/4 ரன் (எதிர், தெ.ஆ., 2006, ஜோபெர்க்) நீடிக்கிறது.
இது, ஒருநாள் போட்டி வரலாற்றில் 9வது அதிகபட்ச ஸ்கோர். இப்பட்டியலில் இங்கிலாந்து (498/4, எதிர், நெதர்லாந்து, 2022) முதலிடத்தில் உள்ளது. 47 பந்தில் ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் கிரீன் (நேற்று 47 பந்து) 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் மேக்ஸ்வெல் (40 பந்து, எதிர், நெதர்லாந்து, 2023, டில்லி) உள்ளார். சூப்பர் ஜோடி ஒருநாள் போட்டியில் 250+ ரன் சேர்த்த ஆஸ்திரேலிய துவக்க ஜோடி வரிசையில் ஹெட்-மார்ஷ் (250 ரன்) 5வது இடம் பிடித்தனர். முதலிடத்தில் ஹெட்-வார்னர் (284 ரன், எதிர், பாக்., 2017, அடிலெய்டு) உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் 'டாப்-3' பேட்டர்கள் நேற்று முன்தினம் சதம் அடித்தனர். இது, ஒருநாள் அரங்கில் இரண்டாவது முறை. இதற்கு முன் தென் ஆப்ரிக்க அணி (ஆம்லா-153, ரோசாவ்-128, டிவிலியர்ஸ்-149 எதிர், வெ.இ., 2015) சாதித்திருந்தது. ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் முதல் முறையாக 3 பேட்டர்கள் சதம் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 5வது முறை. இதற்கு முன் தென் ஆப்ரிக்கா 3, இங்கிலாந்து ஒரு முறை இப்படி சாதித்தன. 5 விக்கெட் நேற்று முன்தினம் அசத்திய கூப்பர் கொனாலி (22 ஆண்டு 2 நாள்), ஆஸ்திரேலியா சார்பில் 5/22 விக்கெட் வீழ்த்திய இளம் பவுலரானார். கிரெக் மெக்டர்மட் (22 ஆண்டு, 204 நாள், 5/44, எதிர், பாக்., 1987) சாதனையை தகர்த்தார். ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய 'ஸ்பின்னர்' ஆனார் கூப்பர் கொனாலி (5/22). பிராட் ஹாக் (5/32, எதிர், வெ.இ., 2005) சாதனையை முறியடித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-08-2025.
25 Aug 2025 -
கேப்டன் பிரபாகரன் திரைவிமர்சனம்
25 Aug 2025விஜயகாந்தின் 100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.
-
ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா
25 Aug 2025தி.கிட்டு இயக்கத்தில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஆட்டி’.
-
6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு
25 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதம் 6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஜெகதீப் தன்கர் விவகாரம்: எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம்
25 Aug 2025புதுடெல்லி : ஜெகதீப் தன்கர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு ஏன்? - அமெரிக்க துணை அதிபர் விளக்கம்
25 Aug 2025நியூயார்க் : ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விளக்கமளித்துள்ளார்.
-
மாநில அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும்
25 Aug 2025சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார்.
-
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணை:: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
25 Aug 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள
-
பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை
25 Aug 2025டெல்லி, பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 27-ந் தேதி தமிழகம் வருகைதர உள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்திப்பு : இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை
25 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
சிறந்த சண்டை இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
25 Aug 2025தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநரான சில்வா இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
-
காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு
25 Aug 2025பாலஸ்தீனம், காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அரியானா: தூய்மை பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
25 Aug 2025குருகிராம் : நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
-
லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்: நேதன்யாகு
25 Aug 2025இஸ்ரேல், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்று நேதன்யாகு தெரிவித்தார்.
-
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு கன்னியாகுமரி எம்.பி. வாழ்த்து
25 Aug 2025கன்னியாகுமரி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்திரா திரைவிமர்சனம்
25 Aug 2025போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.
-
வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: மேயர் பிரியா தொடக்கி வைத்தார்
25 Aug 2025சென்னை : தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
-
இந்த வாரம் வெளியாகும் குற்றம் புதிது இசை
25 Aug 2025ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைவு
25 Aug 2025தருமபுரி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
-
கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: சென்னை ஐகோரட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
25 Aug 2025டெல்லி : தமிழகத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பு
25 Aug 2025தருமபுரி, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது.
-
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
25 Aug 2025சென்னை : கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு: 2 பேர் கைது
25 Aug 2025லண்டன், லண்டனில் உள்ள இந்திய உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது - காமேனி பேச்சு
25 Aug 2025தெஹ்ரான் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று காமேனி பேச்சினார். ஈரான் தலைவர் காமேனி பேசியதாவது:-
-
இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர்க்கப்பல்கள் : ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்
25 Aug 2025டெல்லி : இந்திய கடற்படைக்கு புதிதாக ஐஎன்எஸ் ஹிமகிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் தயாராகி உள்ளன.