எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திண்டுக்கல் : பிரதமரின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் கூறியது: “அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியா முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 35 சதவீத ஆடைகள் அமெரிக்காவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறோம். பிரதமர் மோடியின் தவறான வெளியுறவு கொள்கையே இதற்குக் காரணம். அமெரிக்க தேர்தலின்போது மோடி, ட்ரம்ப்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எந்த நாட்டின் பிரதமரும் மற்ற நாட்டுக்கு ஆதரவாக கத்துக்குட்டி போல் தலையிட்டு பிரச்சாரம் செய்யமாட்டார்கள்.
50 சதவீத பெட்ரோலிய இறக்குமதியின் காரணமாக பயனடைவது பா.ஜ.க., அதானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமே. ஆனால் பாதிப்படைவது சிறு, குறு தொழில் செய்பவர்கள் தான். நேற்று கடல் உணவுகள் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக, வேலைவாய்ப்பில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். மத்திய அரசு மந்தமாக செயல்படக் கூடாது. தொழில் துறையினரை அழைத்துப் பேச வேண்டும். மத்திய அரசு செய்ய வேண்டிய உதவியை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மோடியின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன உதவியுடன் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆலோசனை மற்றும் ஆயுதங்கள் வழங்குகிற ஓர் அரசை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாம் ஏன் அங்கு போக வேண்டும். மோடி பிரதமராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர். நாடாளுமன்றத்தில் சீனா என வாய் திறந்து மோடி பேசியது இல்லை. இப்படி பணிந்து சீனா போக வேண்டியது இல்லை.
பா.ஜ.க. அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது. வாக்குத் திருட்டை தடுத்தால்தான் இந்தியாவுக்கு நல்லது. 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்பது கருப்பு சட்டம். ஊழல்கள் குறித்து ஏற்கெனவே வலுவான சட்டம் உள்ளது. 30 நாட்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம். தற்போது பார்க்கிறோம் அமலாக்கத் துறை தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களே அமலாக்கத் துறை அலுவலகமாக செயல்படுகிறது.
யார் வேண்டுமானாலும் பொய் வழக்கு போட்டுவிட்டு 30 நாட்கள் சிறையில் வைத்து பதவியை பறிக்கலாம். ஒருவர் தவறு செய்திருக்க வேண்டும். அது நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும். பின் தண்டனை பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களை யாரும் காப்பாற்ற போவதில்லை.
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுகிறது. இதற்காக எம்.பி சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார். சர்வாதிகார அரசு பண்டைய காலங்களில் இருந்து தற்போது வரை வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் வரலாறு. விஜய், காங்கிரஸ் கட்சி குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதர்களுக்கு ஓட்டு மட்டுமே இருக்கிறது. ஆனால், அதையும் பா.ஜ.க. திருடுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இல்லை.
இந்தியாவை வலுவான நாடாக காங்கிரஸ் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா என்ற தேசமே சின்னாபின்னமான சூழலில் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன்” என்றார். தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் நடந்த மகளிர் சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
01 Sep 2025 -
சென்னையில் டீ, காபி விலை உயர்வு அமல்
01 Sep 2025சென்னை : சென்னை மாநகரில் டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வந்தது.
-
அமெரிக்கா அதிக வரி விதிப்பு: உதவித்திட்டம் அறிவிக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
01 Sep 2025சென்னை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு உதவித்திட்டம் அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
குற்றம் புதிது திரைவிமர்சனம்
01 Sep 2025போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார்.
-
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது
01 Sep 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது.
-
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
01 Sep 2025சென்னை : தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாரதத்தாயின் வீர மகன்: பூலித்தேவருக்கு கவர்னர் புகழாரம்
01 Sep 2025சென்னை : பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் கூறியுள்ளார்.
-
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன்கள் குப்பைகள் அகற்றம்
01 Sep 2025சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்: தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேற்றம் : ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Sep 2025சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-
கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
-
திருவள்ளூர் அருகே மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டாஸ்மாக் ஊழியர்கள்
01 Sep 2025சென்னை : காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர்
-
ரஷ்யா - உக்ரைன் போர்: முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தல்
01 Sep 2025பெய்ஜிங் : ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
அடுத்த வாரம் வெளியாகும் யோலோ
01 Sep 2025MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.
-
இந்த வாரம் வெளியாகும் காந்தி கண்ணாடி
01 Sep 2025ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் தற்போது இயக்கியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
-
ஜார்க்கண்ட்டில் 2 மாவோயிஸ்டுகள் கைது
01 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்: உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரம்
01 Sep 2025டெல்லி : டெல்லியில் பரவும் பறவை காய்ச்சலால் உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம் அடைந்துள்ளது.
-
பாம் இசை வெளியீட்டு விழா
01 Sep 2025ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர் நடிக்கும் படம் பாம்.
-
மூளையை தின்னும் அமீபா: கேரளாவில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலி
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
-
மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் ரயில் பாதை: பிரதமர் செப்.13-ல் திறந்து வைக்கிறார்
01 Sep 2025ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.
-
பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அடித்து நொறுக்கிய இலங்கை அரசு
01 Sep 2025ராமேசுவரம் : பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அடித்து உடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ திடீர் ஆதரவு
01 Sep 2025சென்னை : சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்திறகு துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
தெற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரம்: போலீஸ் வேன், சிறைத்துறை பேருந்து மோதல்: 16 பேர் பலி
01 Sep 2025விண்ட்ஹொக் : தெற்கு ஆப்பிரிக்காவில் போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு
01 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்வு கட்டாயம் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
01 Sep 2025புதுடெல்லி : ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
01 Sep 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.