எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நேற்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார். ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை வருகிற 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாதாம் மற்றும் உலர் பழங்கள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், ஜாம்கள், நெய், வெண்ணெய், ஊறுகாய், சட்னிகள், டிராக்டர்கள், குளிர்சாதன பெட்டிகள், ஏசி உட்பட சுமார் 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைய வாய்ப்பு உள்ளது.
ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன. சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்படும். எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும். ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.
தற்போது பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சார்ந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்படுத்தும் சர்க்கரை, தேநீர் போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம், வெண்ணெய், நெய், கைப்பேசி போன்ற பொருள்களுக்கு 12 சதவீதம், சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பொருள்களுக்கு 18 சதவீதம், தொலைக்காட்சி, குளிர்பதனப்பெட்டி மற்றும் குளிரூட்டிகள் (ஏ.சி.) போன்ற பொருள்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
இந்த சூழலில் மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12 சதவீத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டுவரும் 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளன. அதேபோல் 28 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை குறையும் பொருட்கள்:
பாதாம் மற்றும் உலர் பழங்கள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், ஜாம்கள், நெய், வெண்ணெய், ஊறுகாய், சட்னிகள், டிராக்டர்கள், குளிர்சாதன பெட்டிகள், ஏசி, 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள், பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின், சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025 -
அமைதி - போர் 2-ல் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உலகம் : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
03 Sep 2025பெய்ஜிங் : அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அ
-
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை விளக்கம்
03 Sep 2025சென்னை : சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை
03 Sep 2025புதுடெல்லி : ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜ
-
பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
03 Sep 2025திண்டுக்கல் : பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Sep 2025சென்னை : தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழி பெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை
03 Sep 2025சென்னை : தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை நடத்தி வருகிறது.
-
சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு
03 Sep 2025கொழும்பு : கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்
-
தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் - இ.பி.எஸ்.
03 Sep 2025சென்னை : தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு டி.ஜி.பி. பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 Sep 2025மதுரை : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டி.ஜி.பி. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
03 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தினார்.
-
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி
03 Sep 2025சென்னை : விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் எம்.பி. பதில்
03 Sep 2025சென்னை : கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது?
-
இந்தியா மீதான இறக்குமதி வரி விதிப்பு மறுபரிசீலனையா? - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
03 Sep 2025வாஷிங்டன் : இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள்
-
முதுநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு: பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி-அதிர்ச்சி
03 Sep 2025புதுடெல்லி : பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
-
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்
03 Sep 2025சண்டிகார் : கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.
-
ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
03 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண
-
பா.ஜ.க. உட்கட்சி பூசல்களை தவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
03 Sep 2025புதுடெல்லி : பா.ஜ.க. உட்கட்சி பூசல்களைதவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
-
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பேரிடர் ஒத்திகை
03 Sep 2025ராமேசுவரம் : ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை மோடி அரசு ஓயாது: அமித்ஷா
03 Sep 2025புதுடெல்லி : நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதா விலகல்
03 Sep 2025ஹைதராபாத் : பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்து கவிதா நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
-
திருச்சி வந்தடைந்த ஐனாதிபதிக்கு கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு
03 Sep 2025திருச்சி : திருச்சி வந்தடைந்த குடியரசுத் தலைவர் முர்முவை ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
-
நடிகர் சவுபின் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
03 Sep 2025சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
-
ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
03 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
-
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
03 Sep 2025விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.