Idhayam Matrimony

நாளை நடக்கும் கூட்டத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை: செங்கோட்டையன்

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

ஈரோடு : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாளை அதாவது 5-ந் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக கூறினார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

5-ஆம் தேதி கட்சி அலுவலகத்தில்தான் கூட்டத்தை வைத்திருக்கிறேன்..என்னுடைய கருத்தை தெரிவிக்கப்போகிறேன். அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன். கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை. 5ம் தேதி நடக்கப்போவது உங்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடன் முன்னாள் எம்.பி. சந்த்தியபாமா சந்தித்தார். செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று முன்னாள் எம்.பி. சத்தியபாமா கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து