எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன் உள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், எலான் மஸ்க்கை முந்தி, உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் அதிகரித்ததால், இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தில் 41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் எலிசன்.
81 வயதான எலிசனின் சொத்து மதிப்பு தற்போது 393 பில்லியன் டாலராக (சுமார் ரூ.34 லட்சம் கோடி) உள்ளது. இதன் மூலம் 384 பில்லியன் டாலர்களை கொண்டுள்ள மஸ்க்கை அவர் முந்தியுள்ளார். தற்போது எலிசன் மற்றும் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மெட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருவது ஆரக்கிள். அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இதன் இணை நிறுவனராக லாரி எலிசன் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


