எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அவதியடைந்தனர்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 200 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிகு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமானத்தில் மின்சார வினியோக அமைப்பு பழுதடைந்ததால் ஏ.சி சிஸ்டம் செயல்படவில்லை. இதனால் பயணிகள் கடும் வெப்பத்தால் மிகவும் சிரமப்பட்டனர். நீண்ட நேரமாகியும் பயணிகளுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.
விமானத்தின் மின்சார வினியோக கோளாறும் சரி செய்யப்பட்டவில்லை. 2 மணி நேரத்துக்கு பிறகு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு விமான நிலைய பயணிகள் அறையில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. 6 மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை மாற்று விமானத்தில் பயணிகள் சிங்கபூர் அழைத்து செல்லப்பட்டனர்.இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாக தெரிவித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


