Idhayam Matrimony

இந்தியா - பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      இந்தியா
Rajnath-Singh 2024-12-07

Source: provided

ஐதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஐதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்த 'ஐதராபாத் விடுதலை தின' கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட தாக்குதலாகும். எதிர்காலத்தில் இதுபோல ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மீண்டும் தொடங்கும்.

யாருடைய தலையீட்டாலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான அந்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை. சிலர் இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாகக் கூறுகின்றனர், யாரும் அதைச் செய்யவில்லை. இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதில் எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டையும் இந்தியா நிராகரித்ததாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் தெளிவுபடுத்தினார். இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும், மூன்றாம் தரப்பு தலையிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து