Idhayam Matrimony

சென்னை, கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-4 2025-09-26

சென்னை, சென்னை, கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் 23.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகள் பல்வேறு கனிம வளங்களைக் கொண்டுள்ளன. இக்கனிம வளங்கள் மாநிலத்தின் விரைவான தொழில்மயமாக்கலுக்கு வழிவகை செய்கின்றன. கனிம வளத்துறையானது தொழில் வளர்ச்சிக்கேற்ப அதிகரித்து வரும் கனிமத் தேவைகளை பூர்த்தி செய்தும், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்குக் கனிமங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் வழங்கப்படுவதை உறுதி செய்தும் வருகிறது.

புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகமானது சென்னை, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான கட்டிடத்தில் போதுமான இடவசதியின்றி இயங்கிவருகிறது. எனவே இந்த துறையின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு, அதே இடத்தில் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 23.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர்  திறந்து வைத்தார்.

இந்த அலுவலகக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் பார்வையாளர்களுக்கான அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஓட்டுநர் ஓய்வறையும், முதல் தளத்தில் இயக்குநர் அறை, கூடுதல் இயக்குநர் அறைகள், இணை இயக்குநர் அறைகள் மற்றும் பார்வையாளர்களுக்கான அறைகளும், இரண்டாம் தளத்தில் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நேர்முக உதவியாளர் மற்றும் மேலாளர் அறைகளும், மூன்றாம் தளத்தில் கணக்குப் பிரிவு, தணிக்கைப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சட்ட அதிகாரி அறை, அலுவலக கோப்புகளை பராமரிக்கும் இரண்டு காப்பக அறைகள் ஆகியவையும், நான்காவது தளத்தில் மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டரங்கு மற்றும் சுரங்க குத்தகை கோப்புகளை கையாளும் சுரங்கப் பிரிவு, ஆய்வுக்கூடம். நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் வசதி, மின்தூக்கி மற்றும் தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து