எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உடற்கூராய்வுக் கூடத்துக்கு வந்த போது உயிரிழந்தவர்ளின் உறவினர்கள் சீமானை உள்ளே அனுமதிக்காமல் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீஸார் உறவினர்களை சமாதானம் செய்து சீமானை அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.
மேலும், காயமடைந்தவர்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: ”எதிர்பாராத விதமாக நடந்த வேதனையை உண்டாக்கும் மோசமான சம்பவம். இனி பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை படிப்பினையாக எடுத்துக் கொண்டு வருங்காலங்களில் தவறு நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதனைக் கடந்து வர வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


