எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சூர் : ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வாக்கு திருட்டு தொடர்பாக பா.ஜ.க.வையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியில் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும், கேரளா மாநில அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவருமான பிரிந்து மகாதேவ், மலையாள டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ''ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்" எனப் பேசியுள்ளார். மகாதேவ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பா.ஜ.க. மேலிடம் அவர் மீது எந்தவித நடவடிக்கையில் எடுக்கவில்லை.
இதனையடுத்து ராகுல் காந்தி மீது நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. மேலும் கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீகுமார் சிசி அளித்த புகாரின் அடிப்படையில் பெரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிரிந்து மகாதேவை கண்டித்து கேரளா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டங்களை நடத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


