எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீஃபெர்ட் 48 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் 4 பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷின் அதிரடியால் அந்த அணி 18 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________________
தோனியின் சாதனை முறியடிப்பு
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தினர். ரவீந்திர ஜடேஜா 176 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். முதல் இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 129 இன்னிங்ஸ்களில் 79* சிக்ஸர்கள் விளாசி தோனியின் சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார்.
______________________________________________________________________________________________________
தொடரை வென்ற வங்காளதேசம்
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் சட்ரான் 38 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் நசும் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என வங்காளதேசம் கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 33 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
______________________________________________________________________________________________________
3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2025.
04 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
04 Oct 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
நடிகர் ரஜினியை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார் : எஸ்.வி.சேகர் பேட்டி
04 Oct 2025சென்னை : ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும்: டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி
04 Oct 2025டேராடூன் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
04 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையை அரசு வெளிக்கொண்டு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
04 Oct 2025சென்னை, மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை
-
அண்ணாமலை டெல்லி பயணம்
04 Oct 2025கோவை : தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
-
காசா அமைதி ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி
04 Oct 2025புதுடெல்லி : காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து த.வெ.க. சார்பில் ஆறுதல்
04 Oct 2025கரூர் : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக த.வெ.க.
-
உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
04 Oct 2025ஜெய்ப்பூர் : பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
04 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா? அமைச்சர் துரைமுருகன் பதில்
04 Oct 2025வேலூர், 'நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம்.
-
கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Oct 2025சென்னை : சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
கரூர் நெரிசல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆய்வு
04 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
-
மும்பையில் சர்வதேச விமான நிலையம்: வரும் 8-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
04 Oct 2025மும்பை : வரும் 8-ம் தேதி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
கலைஞர் பல்கலை., மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
04 Oct 2025புதுடெல்லி : கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளி: அரபிக்கடலில் உருவான 'சக்தி' புயல்
04 Oct 2025புதுடெல்லி : வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள
-
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக்., இன்று மோதல்
04 Oct 2025கொழும்பு : கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
04 Oct 2025மும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அகமதாபாத் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
-
குறை கூறுவதற்கு எதுவும் இல்லை: அகமதாபாத் டெஸ்ட் வெற்றி குறித்து கேப்டன் கில் கருத்து
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என சுப்மன் கில் கூறினார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
04 Oct 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
04 Oct 2025நாமக்கல், உயர் நீதிமன்றம் உத்தரவு காரணமாக நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா
04 Oct 2025நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது
04 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று விசாரணை தொடங்கினர்.