எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிகாகோ : சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் அரசு மேற்கொண்டு வரும் ‘ஆபரேஷன் மிட்வே பிளிட்ஸ்’ என்ற தீவிர குடியேற்ற அமலாக்க நடவடிக்கையால் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தேசிய பாதுகாப்புப் படையை பயன்படுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை இல்லினாய்ஸ் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் நிராகரித்ததால், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சிகாகோவின் பிரைட்டன் பார்க் பகுதியில் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் வாகனத்தை, 10க்கும் மேற்பட்ட கார்கள் சுற்றிவளைத்து இடித்துத் தாக்கியுள்ளன. இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய அதிகாரிகள் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய பெண், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றும், அவரிடம் தானியங்கி ஆயுதம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த அந்தப் பெண், தானே காரை ஓட்டி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்ததுடன், கூட்டத்தைக் கலைக்க போலீசார் மிளகு ஸ்ப்ரே மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


