Idhayam Matrimony

ஈரோடு, நாகமலை குன்றினை 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவித்தது அரசு

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் எலத்தூர் ஏரி செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.

நாகமலை குன்றைப் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதன் மூலம், தமிழ்நாடு தனது பாதுகாப்பு மற்றும் நிலையான பாரம்பரிய நிர்வாகத்தில் உள்ள தலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், இந்த நிலப்பரப்பின் பல்லுயிர், சூழலியல் பங்கு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து