முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசு அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை (10-ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க முன்வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து