எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புவனேஷ்வர் : ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய தேசிய கீதமான ’ஜன கண மன அதிநாயக பாடலை பாடியவர் ரவீந்திரநாத் தாகூர். வங்க மொழி கவிஞரான ரவீந்திரநாத் தாக்கூர் கொல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு ஆங்கிலேயே ஆட்சிகாலத்தில் ஒடிசாவின் புரி கடற்கரை அருகே நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடு கட்டி ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் காலமான பின்னர் அந்த வீட்டை கல்விக்காக பயன்படுத்த ரவீந்திரநாத் குடும்பத்தினர் ஒடிசா அரசுக்கு கொடுத்தனர். அந்த வீடு கல்லூரி விடுதியாக செயல்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்த வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்தனர். அதன்பின் அந்த வீடு கைவிடப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு புரியை தாக்கிய புயலில் வீடு கடுமையாக சேதமடைந்தது.
இந்நிலையில், ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா கலாசாரத்துறை மந்திரி சூர்யவன்ஷி சுராஜ் கூறுகையில், புரியில் உள்ள குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டை புதுப்பித்து அதை அவரது நினைவு அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்’ என்றார். அருங்காட்சியகமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறுனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


