எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சாதிகளை ஒழிப்பதற்கு சிறந்த வழி என்ன? என்று ஆசிரியர் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த முட்டாள் மாணவன், "அனைவரின் சாதி சான்றிதழ்களையும் வாங்கி கிழித்து எறிந்து விடலாம். அவ்வாறு செய்தால் யாரிடமும் சாதிக்கு சான்று இருக்காது. அதனால் சாதி ஒழிந்து விடும்" என்று கூறியிருந்தானாம். தமிழ்நாட்டின் தெருக்களில் சாதிகளை ஒழிக்கப் போவதாக தி.மு.க. அரசு ஆணை வெளியிட்டிருப்பதும் அப்படிப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.
சாதிகள் ஒழிக்கப்பட வேண்டியவையே. ஆனால், சட்டத்தைப் போட்டு சாதியை ஒழிக்க முடியாது; அரசாணைகளை வெளியிட்டு அவற்றை சாதிக்க முடியாது. மாறாக, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, சாதியை ஒழிப்பதற்கான சிறந்த வழி சமத்துவத்தை நோக்கி சமூகநீதிப் பாதையில் பயணிப்பது தான். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தி.மு.க. அரசு, சீனி, சக்கரை என்று காகிதத்தில் எழுதி நாக்கில் ஒட்டிக் கொண்டு இனிப்பதைப் போன்று நடிப்பதைப் போலவே, கிராம சபைக் கூட்டங்களில், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கான தீர்மானங்களை இயற்றுவதன் மூலம் சாதிகளை ஒழிக்கப் போவதாக மாயையில் உழன்று கொண்டிருக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் தான் சாதியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்து 58 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்காக ஆக்கப்பூர்வமாக எதை செய்திருக்கிறது? சாதியை ஒழிக்கும் நோக்குடன் தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலையை உயர்த்தலாம்; அதன் மூலம் என்றாவது ஒருநாள் சாதி ஒழியும் என்பது தான் சமூகநீதியாளர்களின் நோக்கம். ஆனால், அந்த நோக்கத்தை நிறைவேற்ற தி.மு.க. என்ன செய்திருக்கிறது?
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் முழுமையாக அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், பட்டியலினமாக இருந்தாலும் அந்த வகுப்புகளுக்குள் இட ஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாக அனுபவிக்காத சமுதாயங்கள் ஏராளமாக உள்ளன. அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்களை கிடைக்கச் செய்வதற்கான ஒரே தீர்வு உள் இடஒதுக்கீடு தான். தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடுகளை வழங்க தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அண்டை மாநிலமான கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40 சதவீத இடஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரம் மற்றும் தெலுங்கானத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகவே இருந்தது. ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகத் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு தனியாக ஏற்படுத்தப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூகநீதியில் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகம் பல படிகள் பின் தங்கிக் கிடக்கிறது. இதை சரி செய்ய தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருவதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், அரசு பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல், தற்காலிக நியமனங்கள், குத்தகை நியமனங்கள், ஒப்பந்த நியமனங்கள் ஆகிய முறைகளில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை மறைமுகமாக ஒழித்துக் கட்டியது தி.மு.க. அரசு தானே. சமூகநீதியை இப்படியெல்லாம் படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்கான அடிப்படைத் தேவை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தான். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை பயன்படுத்தி தான் இந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மு.க.ஸ்டாலின் அரசு மறுப்பது ஏன்? தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க. அரசுதான். அப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு சமத்துவம் குறித்தோ, சாதி ஒழிப்பு குறித்தோ பேசுவதற்கு தகுதி உண்டா?
தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை நீக்குவதாகக் கூறி அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை தி.மு.க. அரசு இயற்றியது. அந்த சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர் தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை; கோவிலை சுத்தம் செய்யும் பணி தான் வழங்கப்படுகிறது என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த அவலத்தை போக்க தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி வழங்கப்படாத 209 அர்ச்சகர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின் இன்று வரை அதை நிறைவேற்றாதது தான் சமூகநீதியா? சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் தி.மு.க., அதன் 76 ஆண்டு கால வரலாற்றில் எத்தனை பட்டியலினத்தவரை பொதுத் தொகுதிகளில் நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறது? தி.மு.க.வின் பட்டியலின முகமாக அறியப்படும் ஆ.ராசவைக் கூட, அவரது சொந்தத் தொகுதியான பெரம்பலூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு, அங்கு நிறுத்தாமல் 350 கி.மீ தொலைவில் உள்ள நீலகிரிக்கு அனுப்பி வைத்த கட்சி தானே தி.மு.க.. பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்று தி.மு.க.வின் 3 முதன்மைப் பதவிகளில் ஒன்றை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கும் துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா? இப்படியாக சமத்துவத்தை ஏற்படுத்தவும், சாதியை ஒழிக்கவும் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தி.மு.க. சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா?
தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதாக அரசாணை வெளியிட்ட அடுத்த நாளே கோவை பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டிய இரட்டை வேடக் கட்சி தானே தி.மு.க.? அப்படிப்பட்ட தி.மு.க. அரசாணைகளை பிறப்பிப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போவதாக நாடகங்களை நடத்தக் கூடாது. மாறாக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, அரசு பணிகளை தற்காலிகமாக நிரப்பாமல், இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தரமாக நிரப்புதல் ஆகியவற்றின் வாயிலாகத் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-10-2025.
11 Oct 2025 -
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
11 Oct 2025புதுடெல்லி : அனில் அம்பானியின் உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
-
சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? - அன்புமணி ராமதாஸ்
11 Oct 2025சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
11 Oct 2025பெங்களூரு : திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை: நயினார் நாகேந்திரன் கேள்வி
11 Oct 2025சென்னை : மகளிர் உரிமைத் தொகை குறித்து நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவர் பலி
11 Oct 2025சென்னை : சென்னையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்தான்.
-
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: 2 குழந்தைகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை
11 Oct 2025பெங்களூரு : 2 குழந்தைகளை கொன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்
11 Oct 2025காசா : காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெற்றனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
11 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் சைபர் மோசடி: 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை
11 Oct 2025காந்தி நகர் : சைபர் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கை ஈடுபட்டனர்.
-
டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை : மத்திய அரசு விளக்கம்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது: கமல் எம்.பி.
11 Oct 2025சென்னை : கார் வழிமறிக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது என்று கமல் எம்.பி. தெரிவித்தார்.
-
35,440 கோடி ரூபாய் மதிப்பிலான 2 வேளான் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி
11 Oct 2025புதுடெல்லி : புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை ப
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 92,000
11 Oct 2025சென்னை : தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ. 600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,000 ஆக உயர்ந்துள்ளது.
-
விமானம் மீது மோதிய பறவைகள்: டெல்லி புறப்பட்ட விமனம் அவசர தரையிறக்கம்
11 Oct 2025டெல்லி : டெல்லி புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதையடுத்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் நேரில் நிதியுதவி
11 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களை திருமாவளவன் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார்.
-
காலை உணவுத்திட்ட சம்பள விவகாரம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
11 Oct 2025சென்னை : காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயல்: 2 ராணுவ வீரர்கள் பலி
11 Oct 2025கிஷ்த்வார் : ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
11 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில் இதுவரை 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட
-
மேற்குவங்காளத்தில் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை
11 Oct 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது.
-
சமையல் கேஸ் லாரிகள் ஸ்டிரைக்: தடைகோரி ஐகோர்ட்டில் மனு
11 Oct 2025சென்னை : சமையல் கேஸ் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க பொதுமக்களிடம் வரவு - செலவு கணக்குகளை விளக்கி சொல்ல வேண்டும் : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Oct 2025சென்னை : ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க மக்களிடம் வரவு - செலவு கணக்குகளை விளக்கி சொல்ல வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டா
-
மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை
11 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று (அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம்
11 Oct 2025இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.
-
டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.