எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பீகாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.
சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாராவில் உள்ள ஜெயபிரகாஷ் இல்லத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் சிபிஆர் நேரில் சென்றார். அங்கு, ஜெயபிரகாஷ் நாராயண் கிராமத்தில் உள்ள அவரது தேசிய நினைவுச் சின்னத்திற்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். சோசலிசத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜெயபிரகாஷ் நாராயணின் மனைவியின் பெயரிடப்பட்ட புத்தகக் கடையான ‘பிரபாவதி புஸ்தகலயா’வையும் அவர் பார்வையிட்டார்.
இதனிடையே, தனது 19 வயதில், 1974ம் ஆண்டு நாராயண் தொடங்கிய ‘சம்பூர்ண கிராந்தி’ (முழு புரட்சி) நிகழ்ச்சியில் தான் இணைந்திருந்ததாக குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். எனது 19வது வயதில் அவரது முழுமையான புரட்சிக்கான அழைப்பில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அதில் முழு வீரியத்துடன் பங்கேற்றேன். அவரது மரபு எப்போதும் நமது முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்யட்டும். அவரது தொலை நோக்குப் பார்வையும் லட்சியங்களும் என்னையும் எண்ணற்ற மற்றவர்களையும் நீதியான மற்றும் சுதந்திரமான இந்தியாவுக்காகப் பாடுபடத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


