எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் செல்போனுக்கு பதில் வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் கல் இருந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலச்செனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேமானந்த். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த 14ம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1.86 லட்சத்திற்கு செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தனது கிரிடிட் கார்டு மூலம் அவர் ஆடர் செய்துள்ளார்.
இந்நிலையில், பிரேமானந்த் ஆர்டர் செய்த செல்போன் பார்சல் கடந்த 19ம் தேதி மாலை வீட்டிற்கு வந்து வந்துள்ளது. டெலிவரி ஊழியர் அந்த பார்சலை பிரேமானந்த்திடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த பிரேமானந்த் பார்சலை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் செல்போனுக்கு பதில் வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் கல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமானந்த் உடனடியாக இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலும் பிரேமானந்த் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


