எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கடந்த 16-ம்தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த 19ம் தேதி தீபாவளி விடுமுறைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்குப்பின் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கரூர் வந்தனர். இன்று காலை 10 மணியளவில் கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து 5 மணிநேரமாக விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு கயிறுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தியும், 3டி டிஜிட்டல் ஸ்கேனர்கள் மூலம் அளவீடு செய்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


