எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கரூர் விவகாரம் தொடர்பாக சி.சி.டி.வி. உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர் என த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் கூறினார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் சென்னை த.வெ.க. அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் கொடுக்க த.வெ.க. அலுவலகம் வந்தனர். போட்டோ, சி.சி.டி.வி. ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர். பரப்புரை வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை 3 நாட்களில் தருவோம். எங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்யவில்லை. சம்மன் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராவோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


