எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : கைகளில் வலி ஏற்பட்டு சிலம்பம் சுற்ற முடியாததால் வருத்தம் அளிக்கிறது என்று சிலம்பம் மாணவி விபரீத முடிவை எடுத்தார்.
மதுரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் தானியலட்சுமி என்ற மகாலட்சுமி (16 வயது). மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர், சிறுவயதிலேயே சிலம்பம் பழகி போட்டிகளில் பங்கேற்றார். மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று பல்வேறு பரிசுகளை பெற்று சாதித்தவர்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக தானியலட்சுமிக்கு கைகளில் வலி இருந்துள்ளது. இதனால், சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கும் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்துகள் எடுத்து வந்தார். கைகளில் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சிலம்பம் விளையாட முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு திடீரென தூக்குப்போட்டு தானியலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவலறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமர் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


