எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் மலைமாதா கோவிலுக்கு அருகில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் கீரனூர் சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறிய ரக விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முன்பகுதி சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாலையில் போக்குவரத்து இருந்த நேரத்தில் விமானம் தரையிரங்கியது. நல்வாய்ப்பாக மோதல் தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயிற்சி விமானி இருவர் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற விமானம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


