எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை என்று தி.மு.க. வழக்கறிஞர் தகவல்
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தரவில்லை என தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
2018-ல் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தங்களது குறைகளை தெரிவியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
மேகதாது அணை தொடர்பான குறைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அதை மீறி அவர்கள் ஏதாவது செய்தால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு இந்த உத்தரவு நமக்கு வழி வகுக்கும். அதற்குள், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக சில ஊடகங்களில் தவறுதலாக செய்திகள் வந்துவிட்டன. அது தவறு. மேகதாது அணை கட்டிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு எந்த அனுமதியையும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


