எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, பீகாரில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் தேர்தலில், கருத்துக் கணிப்புகளின் முடிவுகளையும் விஞ்சி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்திட முக்கிய காரணம் ஒருவரே என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைத்தான்!
பீகார் தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசியிருப்பதாவது: “இந்த தேர்தல் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர், உலகின் 11-ஆவது பெரிய பொருளாதாரமாக விளங்கிய நம் நாடு, உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாகும் இலக்கை நோக்கி அந்த வழியில் நகர்ந்து வருகிறது. இவையனைத்தும் அரசின் நிலையான கொள்கைகள் தொடர்வதால் நடைபெறுகின்றன. இந்த இடத்தில்தான் இந்தியாவும் இந்தியர்களும் அவரது செயல்திறனை அங்கீகரிக்கிறார்கள். மக்கள் சிறந்த எதிர்காலத்தை, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையே விரும்புகிறார்கள். இதையே பிரதமர் இப்போது நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


