எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உத்தரப் பிரதேசம் : உத்தரப்பிரதேசத்தில் கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர். நிகழ்விடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல் குவாரியின் இடிபாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
அதே நேரத்தில் பலர் சிக்கியிருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அமைச்சரும் உள்ளூர் எம்எல்ஏவுமான சஞ்சீவ் குமார், சுமார் ஒரு டஜன் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கலாம் என்று கூறினார். சிக்கிக் கொண்டிருந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
சுரங்க விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வாரணாசி மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்தியா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று இரவு முதல் நடந்து வருகிறது.
ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலியானவர் பனாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜு சிங் (30) என போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. மலையிலிருந்து விழுந்த கற்கள் மிகப் பெரியவை என்றும், கவனமாக வேலை செய்ய வேண்டியிருப்பதால் மீட்புப் பணிகள் நேரம் எடுக்கும். முழு நிர்வாகமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


