Idhayam Matrimony

கடந்த 4 மாதங்களாக நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்திய புலி சிக்கியது

சனிக்கிழமை, 29 நவம்பர் 2025      தமிழகம்
Puli-1

Source: provided

நீலகிரி : நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கூடலூர் வனத்துறையினர் 5 இடங்களில் இரும்பு கூண்டுகளை வைத்தனர். கூண்டில் புலிக்கு இரையாக ஆடுகளை கட்டி வைத்தனர். ஆனாலும், கடந்த 4 மாதங்களாக புலி சிக்காமல் போக்குகாட்டி வந்தது. பின்னர், கேரள மாநிலம் நெளம்பள்ளத்தில் இருந்து 30 அடி நீள ராட்சத இரும்பு கூண்டை கொண்டு வந்து புலியை பிடிப்பதற்காக வைத்தனர். 

இந்நிலையில், 4 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி நேற்று முன்தினம் ளஇரவு கூண்டில் சிக்கியது. புலி கூண்டுடில் சிக்கியதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் கூண்டில் சிக்கிய புலியை லாரியில் கொண்டு சென்று கூடலூரில் அடந்த வனப்பகுதியில் விட்டனர். புலி கூண்டில் பிடிபட்டதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து