எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : பெங்களூருவில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஊதா வழித்தடத்தில் நேற்று காலை வழக்கம் போல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வபர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலர் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த ரயில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தபோது வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொண்டார். இதனால் ஊதா வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை அப்புறப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ஷந்தாகோட் பட்டீல் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், காலை நேரத்தில் ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் மெட்ரோ ரயிலை நம்பியிருந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே மெட்ரோ நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு, காலை 9.40 மணியளவில் ஊதா வழித்தடத்தில் மீண்டும் மெட்ரொ ரயில் சேவை தொடங்கப்பட்டதாக அறிவித்தனர். இதையடுத்து வழக்கம்போல் மெட்ரோ ரயில் சேவை இயங்க தொடங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


