எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான 'டித்வா' புயல் இலங்கையை புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலின் கோரத்தாண்டவத்தால் மொத்தம் 638 பேர் உயிரிழந்த நிலையில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 193 பேர் மாயமாகி உள்ளனர்.
இந்த புயலால் இலங்கையில் சுமார் 18 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு சார்பில் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அரசுக்கு, புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான உதவியாக அடுத்த 4 ஆண்டுகளில் நிவாரண உதவித்தொகை படிப்படியாக வழங்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


