எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், தவறுக்காக என்.சி.இ.ஆா்.டி. வருந்தி மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்த் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூா்ய காந்த், 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு புதன்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தாா். இந்த விவகாரத்தை இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன். நீதித் துறை மற்றும் அதன் நோ்மையை அவமதிக்க உலகில் யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்ன விலை கொடுத்தேனும் தடுப்பேன். சட்டம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விவகாரத்தை எப்படி கையாள வேண்டுமென எனக்குத் தெரியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்த் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், தவறுக்காக என்.சி.இ.ஆா்.டி. வருந்தி மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்.சி.இ.ஆா்.டி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலைப் பெற்றபோது, அதில் 'சமுதாயத்தில் நீதித் துறையின் பங்கு' என்ற தலைப்பு கொண்ட பாடப் பிரிவில் சில தகாத உரை இருப்பது கண்டறியப்பட்டது. இதே கருத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்தது. பின்னா், அந்த நூலின் விநியோகத்தை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று அந்தத் துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்கி, அந்த நூலின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நீதித் துறை மீது என்.சி.இ.ஆா்.டி. மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நிலைநாட்டி, அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் நீதித் துறை திகழ்கிறது என்றே என்.சி.இ.ஆா்.டி. கருதுகிறது. நூலில் சில தகாத கருத்துகள் இடம்பெற்றது உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்படவில்லை. முற்றிலும் தற்செயலானதாகும்.
அந்தப் பாடப் பிரிவு உரிய ஆலோசனைகளுடன் மாற்றியமைக்கப்பட்டு மாணவா்களுக்கு புதிய நூல் வழங்கப்படும். இந்தத் தவறுக்காக என்.சி.இ.ஆா்.டி. வருந்தி மன்னிப்பு கோருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடப்புத்தகங்களின் நோக்கம் மாணவர்களிடையே அரசியலமைப்பு கல்வியறிவு, நீதித் துறை மதிப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு குறித்த தகவலறிந்த புரிதலை வலுப்படுத்துவதாகும்.
"எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைக்கவோ எந்த நோக்கமும் இல்லை. அதன் தொடர்ச்சியான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, என்.சி.இ.ஆா்.டி. ஆக்கபூர்வமான கருத்துகளுக்காக காத்திருக்கிறது. மேலும், 2026-27 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டு புதிய நூல் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


