எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 28ம் தேதி இரவு 11.55 மணியில் இருந்து தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவி கோரி அழைத்த 974 இந்தியர்களில் 498 பேர் தமிழர்கள் என தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோல், ஐயக்கிய அரபு-253, பக்ரைன்-95, கத்தார்-66, சவுதி அரேபியா-13, சிங்கப்பூர்-25, ஓமன்-6 என தமிழர்கள் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளனர்.
உதவிகோரி அழைத்த 498 நபர்களும் தொழில் ரீதியாகவும், சுற்றுலாவிற்கும் சென்று சிக்கியர்கள் என விளக்கம் அளித்துள்ளது. உதவிகோரிய அனைவருக்கும் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என வெளிநாடு வாழ் நலத்துறை தெரிவித்துள்ளது. உறவினர்கள் யாரும் பதற்றமோ அல்லது அச்சம் கொள்ளத்தேவை இல்லை எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


