எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படை தளங்கள் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கி வருகின்றது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல்கள் நடைபெற்று வரும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புளோரிடாவில் திங்கள்கிழமை செய்தியளர்களை சந்தித்த ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனையின் போது, ஈரான் போர், உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமாக சூழல் குறித்து இரு தலைவர்களும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்ததாவது: “ரஷ்யா - உக்ரைன் இடையிலான நீண்டகால மோதல் குறித்து பேசினோம். புதினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உறவு தொடர்ந்து பதட்டமானதாகவே இருக்கின்றன. ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டுவர புதிய உதவி செய்ய விரும்புகிறார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் கவனம் செலுத்த புதினிடம் வலியுறுத்தினேன்.” எனத் தெரிவித்தார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு முதல்முறையாக ட்ரம்ப்பும் புதினும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


