எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாக நடக்கிறது. அங்கு போக்குவரத்து முடங்கியதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 119.50 டாலராக அதிகரித்து பின்னர் 112.98 டாலருக்கு விற்றது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும். கச்சா எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காக எண்ணெய் சார்ந்த குறிப்பிட்ட சில தடைகளை நாங்கள் தளர்த்தி வருகிறோம். நிலைமை சீரடையும் வரை அந்தத் தடைகளை நாங்கள் நீக்கி வைப்போம். தேவைப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடற்படையும் அதன் கூட்டாளி நாடுகளும் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லும் என்று தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது. சர்வதேச சந்தையில் நேற்று காலை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 அமெரிக்க டாலராக சரிந்தது. அதேபோல் மற்ற ரக கச்சா எண்ணெய் விலைகளும் கடும் சரிவை சந்தித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


