எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பெட்ரோலிய அமைச்சர் பதிலளித்தபோது, ‘நமக்கு 72 நாட்களுக்கு போதுமான எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. எல்.பி.ஜி. கையிருப்பும் உள்ளது, எல்.என்.ஜி. பற்றாக்குறையும் இல்லை. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.
இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், “வணிக பயன்பாட்டுக்கு எல்.பி.ஜி. சிலிண்டர்களை வழங்க வேண்டாம் என்று எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நிலைமை நாள்தோறும் மோசமாகிறது. மத்திய அரசு நாட்டு மக்களிடம் பொய்களைக் கூறி வருகிறது” என குற்றம் சாட்டினார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ், “நாட்டில் சி.என்.ஜி. நெருக்கடி மிகவும் தீவிரமாக உள்ளது. உண்மையான நிலையை அரசு வெளிப்படுத்தவில்லை. பல ஹோட்டல்கள் மற்றும் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் நிலைமை தீவிரமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது” என குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


